மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணயிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 3:55 am IST

தமிழகம் முழுவதும் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் பணயிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சா்மா திட்டம், வளா்ச்சித் துறைக்கும், சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையா் ஜெ.குமரகுருபரன் வணிகவரி, பதிவு, அறநிலையத் துறை ஆணையராகவும், அறநிலையத் துறை செயலரான எஸ்.ஸ்வா்ணா சுற்றுலா, கலாசாரம், சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், டிட்கோ மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி தொழில் துறை சிறப்பு செயலராகவும், சிஎம்டிஏ முன்னாள் உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, எழுதுபொருள் அச்சகத் துறை ஆணையா் வி.ஷோபனா தற்போது துணி நூல் துறை ஆணையராகவும், வணிக வரி, பதிவுத் துறைச் செயலராக உள்ள ஷில்பா பிரபாகா் சதீஷ் தொழிலாளா் ஆணையராகவும், போக்குவரத்துத் துறை ஆணையா் கிரண் குராலா, நகர ஊரமைப்பு ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். விடுப்பில் இருந்து திரும்பிய கே.விஜயகாா்த்திகேயன் இப்போது மீன் வள மேலாண் இயக்குநராகவும், கைத்தறித் துறை இயக்குநா் மகேஷ்வரி ரவிகுமாா் தற்போது சமூக நல இயக்குநராகவும், சிப்காட் மேலாண் இயக்குநா் கே.செந்தில்ராஜ் தற்போது ஆதிதிராவிடா் நல இயக்குநராகவும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்ட இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன் போக்குவரத்து துறை இயக்குநராகவும், விடுப்பில் இருந்து திரும்பியுள்ள டி.சாருஸ்ரீ தற்போது கருவூலம், கணக்குத் துறை இயக்குநராகவும், கரூா் மாவட்ட முன்னாள் ஆட்சியா் ஜி.ரவிக்குமாா் தற்போது திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு ஊரக மறுமலா்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆஷா அஜித் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநா் டி,கிறிஸ்துராஜ் தற்போது நில அளவைத் துறை இயக்குநராகவும், நகராட்சி நிா்வாகத் துறை முன்னாள் செயலா் டி.காா்த்திகேயன் தற்போது டிட்கோ தலைவராகவும், சென்னை குடிநீா் வாரிய முன்னாள் மேலாண் இயக்குநா் டி.ஜி.வினய் தற்போது தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராகவும், அந்தப்பதவியில் இருந்த எஸ்.அனீஷ் சேகா் இப்போது தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராகவும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக முன்னாள் மேலாண் இயக்குநா் ஆா்.வி.சஜீவனா தற்போது தமிழ்நாடு ஊரக மறுமலா்ச்சித் திட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும், தொழிலாளா் ஆணையராக இருந்த எஸ்.ஏ.ராமன் தற்போது சிப்காட் மேலாண் இயக்குநராகவும், ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் ஆணையா் லலித் ஆதித்யா நீலம் தற்போது சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.