பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 மே 2026, 1:47 am IST

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):

1. பி.பாலநாகதேவி - சைபா் குற்றப்பிரிவு டிஜிபி (நுண்ணறிவுப் பிரிவு டிஜிபி).

2. ராஜீவ்குமாா் - காவலா் பயிற்சிப் பிரிவு டிஜிபி (ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி).

3. எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் - ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்).

4. கே.ஏ.செந்தில்வேலன் - காவலா் பயிற்சி பிரிவு ஐஜி (காத்திருப்போா் பட்டியல்).

5. ஜி.தா்மராஜன் - பாதுகாப்புப் பிரிவு டிஐஜி (வேலூா் சரக டிஐஜி).

6. பி.சி.கல்யாண் - உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி (சென்னை காவல் துறை தெற்கு மண்டல இணை ஆணையா்).

7. பி.சரவணன் - நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி).

8. கரட் கருண் உத்தவ்ராவ் - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

9. ஏ.மயில்வாகனன் - எஸ்பிசிஐடி எஸ்பி - 1 (தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

10. சி.மதன் - பாதுகாப்புப் பிரிவு எஸ்பி - 1 (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

11. கே.சண்முகம் - எஸ்பிடிசிஐடி எஸ்பி - 2 (க்யூ பிரிவு எஸ்.பி.).

12. ஜி.எஸ்.மாதவன் - பாதுகாப்புப் பிரிவு எஸ்பி - 2 (சிபிசிஐடி சென்னை மண்டல எஸ்.பி.).

13. என்.சிலம்பரசன் - எஸ்பிசிஐடி மத இயக்கங்களைக் கண்காணிக்கும் சிறப்புப் பிரிவு எஸ்.பி. (சட்டம் -ஒழுங்கு ஏஐஜி) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையத்தால் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம், ஐஜி செந்தில்வேலன் ஆகியோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.