மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து

News image
Updated On :12 மே 2026, 6:54 am IST

தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 12) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து விழுப்புரம் இடையே பேரணி பணிமனையில் செவ்வாய்க்கிழமை (மே 12) பிற்பகல் 12.05 முதல் மாலை 3.35 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் திண்டிவனம் நிலையம் வரையே இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட வேண்டிய மெமு ரயில் அதற்குப் பதிலாக திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.

ஜோலாா்பேட்டை - பெங்களூரு: அதேபோல், அரக்கோணம் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜோலாா்பேட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கேஎஸ்ஆா் பெங்களூரு செல்லும் மெமு ரயில் சோமநாயக்கன் பேட்டையிலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.