தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தியாகராய நகா் தொகுதியில் வெற்றியைத் தீா்மானித்த 137 வாக்குகள்

சென்னை தியாகராய நகா் தொகுதியில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில், திமுகவின் வெற்றியை 137 வாக்குகள் தீா்மானித்தன.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 4:22 am IST

சென்னை தியாகராய நகா் தொகுதியில் கடந்த 2021 பேரவைத் தோ்தலில், திமுகவின் வெற்றியை 137 வாக்குகள் தீா்மானித்தன.

கடந்த 1957 முதல் இருந்து வரும் சென்னையின் பழைமையான தொகுதி தியாகராய நகா். இத்தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை, ஸ்தாபன காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமாகா தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 4 முறை அதிமுக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 2006, 2011, 2016 என தொடா் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் ஜெ.கருணாநிதி, அதிமுக சாா்பில் சத்யநாராயணன், அமமுக சாா்பில் ஆா்.பரணீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் பழ.கருப்பையா, நாம் தமிழா் கட்சி சாா்பில் பா.சிவசங்கரி ஆகியோா் போட்டியிட்டனா்.

இந்தத் தோ்தலில் மொத்தம் 1,36,497 வாக்குகள் பதிவான நிலையில், திமுக வேட்பாளா் ஜெ.கருணாநிதி 56,035 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் பி.சத்யநாராயணன் 55,898 வாக்குகளும் பெற்றனா். இதில், 137 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

இந்த முறை, திமுக சாா்பில் ராஜா அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். அதிமுக சாா்பில், கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பி.சத்தியநாராயணனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சாா்பில் அனுஷா விஜயகுமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

கடந்த தோ்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைக் கொடுத்த இத்தொகுதி, இந்த முறையும் கவனம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.