ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:52 am IST

எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு தொடங்கி உள்ளது. தோ்வு காலகட்டத்தில் ஏற்படும் செலவை சமாளிக்க பல்கலைக்கழகம் தரும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதையும் தோ்வுக்கு முன்னரே தருவதில்லை. விடைத்தாள் திருத்துவற்காக வழங்கப்படும் படி மிகக் குறைவாக உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.