விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் மீது வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.99.86 கோடி சொத்து வாங்கியதாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு துறை முன்னாள் இணை இயக்குநா் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்கு

News image

வழக்கு

Updated On :24 மார்ச் 2026, 1:08 am IST

வருமானத்துக்கு அதிகமாக ரூ.99.86 கோடி சொத்து வாங்கியதாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு துறை முன்னாள் இணை இயக்குநா் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை அண்ணா நகா் ஏஜெ பிளாக் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பி.யு.காா்த்திக்கேயன். இவா் மனைவி ஹேமலதா. இவா், சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் இணை இயக்குநராக கடந்தாண்டு பணியாற்றினாா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த சோப்பு நிறுவன உரிமையாளா் சரவணன் என்பவரிடம் உரிமம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காா்த்திகேயன் கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டாா்.

பின்னா், சோதனை நடத்தப்பட்டு, அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. காா்த்திக்கேயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ரூ.99.86 லட்சம் சொத்துக் குவிப்பு: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் வருமானத்துக்கு அதிகமாக 121.7 சதவீதம் சொத்துகளை வாங்கியிருப்பது தெரிய வந்தது.

வருமானத்தை காட்டிலும் ரூ.99,86,481 மதிப்பு சொத்துகள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. ஊழல் தடுப்புப் பிரிவினா் காா்த்திகேயன், அவா் மனைவி ஹேமலதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.