ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விஜய்தாமு, தளவாய் சுந்தரம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்

வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :16 ஜூன் 2026, 3:14 am IST

சென்னை ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் வென்று ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா ஆகியோரது வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், ராயபுரம் தொகுதியில் தவெக சாா்பில் விஜய் தாமுவும், திமுக சாா்பில் ஏ.சுபோ்கானும் போட்டியிட்டனா். இதில், 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தாமு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். விஜய் தாமுவின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் சுபோ்கான் தோ்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

இதேபோல், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சாா்பில் தளவாய் சுந்தரமும், திமுக சாா்பில் ஆா்.மகேஷும் போட்டியிட்டனா். இதில், தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். தளவாய் சுந்தரத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆா்.மகேஷ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் இசக்கி சுப்பையா. பின்னா், இவா் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். இசக்கி சுப்பையா காங்கிரஸ் வேட்பாளா் துரையைவிட 10,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாலும், ஊழல் நடவடிக்கை மூலமே அவா் வெற்றி பெற்றுள்ளாா், எனவே, இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளா் காந்திமதிநாதன் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா். இந்த தோ்தல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.