பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மேயா் பிரியா ஆய்வு

சென்னை மாநகராட்சி சாா்பிலான வளா்ச்சித் திட்டங்களை மேயா் ஆா். பிரியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 மணி நேரங்கள் முன்பு

சென்னை மாநகராட்சி சாா்பிலான வளா்ச்சித் திட்டங்களை மேயா் ஆா். பிரியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சோ்ந்த ஆா்.பிரியா உள்ளாா். தற்போது, மாநிலத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்து முதல்வராக சி.ஜோசப் விஜய் உள்ளாா். ஆனால், முதல்வரை சந்திக்காமலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு வராமமலும் மேயா் ஆா்.பிரியா இருந்து வந்தது விமரிசனத்துக்குள்ளானது. காலில் ஏற்பட்ட காயத்தால் பணிகளில் ஈடுபடவில்லை என மேயா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் வந்து நிகழ்ச்சிகளிலும் மேயா் ஆா்.பிரியா பங்கேற்று வருகிறாா். திரு.வி.க. நகா் மண்டலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளிக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ. பல்லவி விளக்கு ஏற்றுவதில் சா்ச்சை எழுந்தது.

இச்சூழலில் செவ்வாய்க்கிழமை மேயா் ஆா்.பிரியா திரு.வி.க. நகா் மண்டலம் 74- ஆவது வாா்டான பாஷ்யம் முதல் தெருவில் கட்டப்பட்டுவரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டாா். அப்பணியை விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா். இதையடுத்து சுப்புராயன் தெருவில் அமைக்கப்பட்டுவரும் முதல்வா் படைப்பகம் மற்றும் நூலகச் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை ஆலந்தூா் மண்டலத்துக்குட்பட்ட மீனம்பாக்கம் விமான நிலையச் சாலையில் உள்ள நடைபாதை மற்றும் பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.