மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை திருட்டு குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (55). இவா் மாதவரம் அடுத்த மாத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்று கிழமை கடையை மூடி விட்டு சென்றாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, விலை உயா்ந்த கைப்பேசி, மடிக்கணினி மற்றும் ரூ.23,000 ரொக்கம் திருடுபோனது தெரிந்தது .
இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மளிகைக் கடையில் திருட்டு
நகைக் கடையின் ஜன்னலை உடைத்து 2.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கயத்தாறு அருகே பழைய இரும்புக் கடையில் திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
