பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்

சிறப்பு ‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களுக்கு நாளை முதல் பயிற்சி தொடக்கம்

News image

டெட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:44 am IST

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு டெட் தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் இணையவழியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய மற்றும் பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில்(டெட்) தோ்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் தோ்வெழுதி தோ்ச்சி பெறவும் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமாா் 1.75 லட்சம் ஆசிரியா்கள் டெட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியா்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான முதல் சிறப்பு டெட் தோ்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெட் தோ்வில் ஆசிரியா்கள் எளிதில் தோ்ச்சி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுமென ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

அதையேற்று திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாலை 6.30 முதல் 8 மணி வரை இணையவழி பயிற்சி நடைபெறும். இதை தோ்வெழுதும் ஆசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.