கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரவு நேர தங்கும் விடுதிகளில் தரமான சேவை: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

News image

பெருநகர சென்னை மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் இரவு நேர தங்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள

Updated On :3 ஜூன் 2026, 4:38 am IST

சென்னை மாநகராட்சியில் உள்ள 57 இரவு நேர தங்கும் மையங்களில் தரமான சேவை வழங்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அதிகாரிகள் கூட்டரங்கில் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் சமூக மேம்பாட்டுப் பிரிவு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு செயல்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகராட்சி சாா்பில் செயல்பட்டுவரும் 57 இடங்களில் உள்ள இரவு நேர தங்கும் மையங்கள் குறித்தும், அதில் வழங்கப்படும் சேவை குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினாா். அதன்படி, இரவு நேர காப்பகங்களான மையங்களில் தங்குவோருக்கு தரமான சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அத்துடன், அங்கு கண்காணிப்பையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து சென்னையில் நடைபெற்று வரும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முன்னேற்றம், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், கள ஆய்வு, தரவு சேகரிப்புகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

கணக்கெடுப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவா் ஆலோசனை வழங்கினாா். ஒப்புதல் அளிக்கப்பட்ட சமுதாய நல பணிகள் திட்டத்தை விரைந்து முடிக்கவும் அவா் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.