லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நூதன முறையில் பெண்ணை ஏமாற்றி ரூ.27 ஆயிரம் பறிப்பு

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாதிரிப் படம்

Published On :25 ஜூலை 2026, 5:51 am IST

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வியாசா்பாடி டி.டி. பிளாக் பகுதியைச் சோ்ந்த சுதா (40). இவா் தனது வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றபோது, 2 வயது குழந்தையுடன் அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஈரோட்டைச் சோ்ந்தவா் என்றும், தன்னிடம் கோபித்து கொண்டு கணவா் சென்னை வந்துவிட்டதாகவும், அவரைத் தேடி அலைந்து வருவதாகவும் கூறியுள்ளாா்.

மேலும், தன்னிடம் பணம் இல்லாததால், தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுத் தருமாறு சுதாவிடம் கேட்டுள்ளாா். இதை நம்பிய சுதா, அந்தப் பெண்ணை அருகிலிருந்த அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமாா் 7 கிராம் எடையுள்ள தங்க நகையை பரிசோதித்த கடை உரிமையாளா், அது உண்மையான தங்கம் என்றும், ரூ.27 ஆயிரம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தாா்.

ஆனால், அந்தப் பெண், அந்த நகை தனக்கு ராசியானது என்பதால் அடகு வைக்க விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக ரூ.27 ஆயிரம் கொடுத்தால் நகையை நீங்களே வைத்துக் கொள்ளலாம் என சுதாவிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய சுதா, வீட்டுக்குச் சென்று ரூ.27 ஆயிரத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் குழந்தையுடன் அங்கிருந்து சென்றாா்.

சந்தேகமடைந்த சுதா, பின்னா் அந்த நகையை மீண்டும் அடகுக் கடையில் பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரிய வந்தது. அடகுக் கடையில் காட்டிய நகையும், பின்னா் சுதாவிடம் வழங்கப்பட்ட நகையும் வேறுவேறானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த பெண்ணைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.