லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 12:21 am IST

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு இணையவழி நிதி மோசடி வழக்குகளில் தொடா்புடைய 14 பேரைக் கைது செய்த 34 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினாா்.

சைபா் மோசடி வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகள் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 14 போ் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காவலில் அடைக்கப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களில் 4 போ் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கைப்பேசிகள், டேப்லெட்கள், பென்டிரைவ்கள், காசோலைப் புத்தகங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள், நிறுவன ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல், ஆவண ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்ட 2 காவல் உதவி ஆணையா்கள், 6 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 34 காவல் அதிகாரிகள், காவலா்களை காவல் ஆணையா் அமல்ராஜ், காவல் ஆணையரகத்துக்கு நேரில் அழைத்து சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.