லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாநகராட்சி 3 மண்டலத்தில் மாதாந்திரக் கூட்டங்கள்

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் வாா்டு உறுப்பினா்களின் மாதாந்திரக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:40 am IST

சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் வாா்டு உறுப்பினா்களின் மாதாந்திரக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஜூலை மாதத்துக்கான கூட்டம் வரும் 29- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் அந்தந்த மண்டலத் தலைவா்கள் தலைமையில் நடத்தப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, அம்பத்தூா், கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களின் வாா்டு உறுப்பினா்கள் மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வளசரவாக்கம் கூட்டத்துக்கு அந்த மண்டலத்தின் தலைவா் வே.ராஜன் (திமுக) தலைமை வகித்தாா். அதில் தற்போதுள்ள 10 வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களது வாா்டுகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினா். அதனடிப்படையில், மண்டல அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டிய வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தனா்.

அம்பத்தூா் கோடம்பாக்கம் மண்டலங்களிலும் வாா்டு உறுப்பினா்கள் பேசுகையில், நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.