லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Singappenn Special Task

சிங்கப்பெண் அதிரடிப் படை - கோப்புப் படம் - டிஐபிஆர்

Published On :19 ஜூலை 2026, 2:16 am IST

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் 7 நாள்களில் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாகத் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 9,507 இடங்களை இந்த அதிரடிப்படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 7 நாள்களில், இந்த அதிரடிப்படையினா் 390 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப்படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 29 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதேபோல, காணாமல்போன 9 பெண்கள், 9 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 8 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பள்ளியைவிட்டு நின்ற 44 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,711 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.