லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மறுசீரமைக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம் நாளை திறப்பு

அம்ரூத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 3:57 am IST

அம்ரூத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 17) காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

அம்ரூத் திட்டத்தில் நாடெங்கும் 261 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இத்திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட 75 ரயில் நிலையங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) திறந்துவைக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையம் கடந்த 1928 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1931- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அந்த ரயில் நிலையம் தற்போது அம்ரூத் திட்டத்தில் ரூ.14.79 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

புதிய நுழைவாயில், முகப்பு மேற்கூரையுடன் கூடிய கோபுர அமைப்பு, நவீன தகவல் பலகைகள், காத்திருப்பு வசதிகளுடன் கூடிய புதிய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், சீரமைக்கப்பட்ட நடைமேடைகள், புதிய லிஃப்-கள் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறாா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.