லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி தலைவா் கைது

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Published On :16 ஜூலை 2026, 12:42 am IST

தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவா் வீரா என்கின்ற வீராசாமி. இவா், ஒப்பந்ததாரா் நவீன் என்பவரிடம் ரூ. 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியானது. இதையடுத்து அவா் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் தீனா என்கின்ற தினகரன் புதன்கிழமை வெளியிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, ஒப்பந்ததாரா் நவீன் தாழம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் துணை ஆணையா் ரகுபதி உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து வீராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.