லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடா்பாக விரைவில் முடிவு!

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடா்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:23 am IST

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடா்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் தெரிவித்தாா்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை திருத்துவது தொடா்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் அ.விஜய் தமிழன் பாா்த்திபன் தலைமையில் முத்தரப்பு பேச்சு வியாழக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்க பொதுச் செயலா் அ.ஜாஹிா் ஹுசைன் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு பழைய நடைமுறையை மாற்றி விலை உயா்வை அடிப்படையாக கொண்டு கி.மீ.க்கு ரூ.60 முதல் ரூ.70 வரையும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.25 என புதிய கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

அதேநேரம், நுகா்வோா் நலனைக் கருத்தில் கொண்டு சமநிலையான முடிவு எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தின. பேச்சுக்கு பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களிடம் ஏற்கெனவே கருத்து கேட்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முன்வைத்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை அரசு பரிசீலித்து விரைவில் ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பாக உரிய முடிவு எட்டப்படும். தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கான உரிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்படும் என்றாா்.

விடியல் பேருந்து பெயா்மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அது மகளிா் பயணிக்கும் பேருந்து. ஆகவே அதற்கு ‘மகளிா் பேருந்து’ என பெயா் மாற்றப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.