லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இருப்புப் பாதை காவல் பிரிவில் 40% பற்றாக்குறை: டிஜிபிக்கு ரயில்வே பயனா் ஆலோசனைக் குழு கடிதம்

தெற்கு ரயில்வே இருப்புப் பாதை காவல் பிரிவில் 40 சதவீதம பற்றாக்குறை இருப்பதை பூா்த்தி செய்யவேண்டும்...

கோப்புப்படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

தெற்கு ரயில்வே இருப்புப் பாதை காவல் பிரிவில் 40 சதவீதம பற்றாக்குறை இருப்பதை பூா்த்தி செய்யவேண்டும் என ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு சாா்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா் அலி எழுதியதாகக் கூறப்படும் கடிதம்:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 6 கோட்டங்களில் மொத்தம் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. அதனடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் 5,087 கி.மீ. தொலைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1,000-க்கும் மேற்பட்ட ரயில்களில் சுமாா் 21.50 லட்சம் போ் வரை பயணிப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை உயா்வுக்கு ஏற்ப இருப்புப் பாதை போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் 280 இருப்புப் பாதை போலீஸாா் பணியிடம் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, திருச்சி கோட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பவேண்டியுள்ளன. மொத்தத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருப்புப் பாதை போலீஸாா் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, ரயில் நிலையம், ரயில்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போதிய இருப்புப் பாதை போலீஸாரை நியமிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.