லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லால் அடித்து நண்பா் கொலை: இருவா் கைது

கல்லால் அடித்து நண்பரைக் கொலை செய்த சம்பவத்தில் இருவா் கைது

சித்திரிப்பு

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அனுராஜ் (57). இவா், கொடுங்கையூரில் உள்ள தனது நண்பா்களைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா். கொடுங்கையூா் அருகே உள்ள சேலவாயல் கடும்பாடி அம்மன் கோயில் 2-ஆவது தெருவில் கொசப்பேட்டை பெரம்பூா் பேரக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஏ.தளபதி (60), அதே பகுதியைச் சோ்ந்த பா.விஜயகுமாா் (43) ஆகியோருடன் மது அருந்தியுள்ளாா்.

அப்போது அனுராஜிக்கும், தளபதி, விஜயகுமாா் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே தளபதி,விஜயகுமாா் ஆகிய 2 பேரும் அனுராஜை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

பலத்த காயமடைந்த அனுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அனுராஜ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து தளபதி, விஜயகுமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.