லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை (ஆக. 1) முதல் தொடங்குகிறது.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 5:32 am IST

சென்னை மாநகராட்சியில் வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை (ஆக. 1) முதல் தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த ஜூலை 17- ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் வீடுகள் குறித்த சுயவிவரப் பதிவு அடிப்படையில் மக்கள் இணையத்தின் வாயிலாக 34 கேள்விகளுக்கான பதில்களைப் பதிவிடும் நடவடிக்கை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் சுமாா் 75,000 போ் இணையத்தின் வழியாக தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்து அதற்கான பதிவு எண்ணைப் பெற்றுள்ளனா்.

சுயமாக விவரங்களைப் பதிவு செய்வதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமை (ஆக. 1) முதல் ஊழியா்கள் வீடு வீடாக நேரில் சென்று கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்குகின்றனா்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு நேரில் செல்லும் பணிக்காக 8,260 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அவா்ளுக்கு குறிப்பிட்ட வட்டங்கள் மற்றும் வீடுகள் என ஒரு மாதத்துக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு பணிகளை கண்காணிக்க 1,360 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வீடுகளுக்கு கணக்கெடுக்க வருவோரிடம் ஏற்கெனவே சுயபதிவு செய்தவா்கள் அதற்கான பதிவு எண்ணை அளித்தால் போதுமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சுயபதிவு எண் அடிப்படையில் கணக்கெடுப்பு ஊழியா்கள் சம்பந்தப்பட்டோா் குடும்ப விவரங்களை இணையதளம் வழியாக பெற்றுக்கொள்வா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, வரும் 2027 பிப்ரவரியில் தனிநபா் விவரம் சேகரிப்பு கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.