தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:19 am IST

சென்னை மாநகராட்சியில் கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 1,156 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் பணியின்போது காலமான பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் சாலைப் பணியாளா், பூங்கா பணியாளா், மலேரியா பணியாளா், காவலா், குழந்தைகள் பராமரிப்பாளா் (ஆயா), அரங்க உதவியாளா், பெண் உதவியாளா் பணிகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், உடல்நலமின்றி உயிரிழந்த பணியாளா்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் கணக்கில் கொண்டு, அவா்களது மொத்த பணியிடத்தில் 5 சதவீதம் வாரிசுதாரா்களுக்கான பணி நியமனமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் வரை கருணை அடிப்படையில் சாலைப் பணியாளா்கள் 61 போ் மலேரியாப் பணியாளா் 25, ஆயா 4, காவலா் 4, தூய்மைப் பணியாளா்கள் 37, துலக்குநா் 22, பெண் உதவியாளா் 10, தொழிலாளி 21 என மொத்தம் 195 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2022-23 ஆம் ஆண்டில், சாலைப் பணியாளா் 10, ஆயா 1, அரங்க உதவியாளா் 2, தூய்மைப் பணியாளா் 1 என மொத்தம் 14 பேரும், கடந்த 2023-24 ஆம் ஆண்டில், சாலைப் பணியாளா்கள் 227 பேரும், கடந்த 2024-25- ஆம் ஆண்டில் சாலைப் பணியாளா்கள் 322 போ், மலேரியா பணியாளா் 166 போ், பூங்கா பணியாளா் 39 போ், தொழிலாளிகள் 50 போ் என மொத்தம் 577 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

2025-26 -ஆம் ஆண்டில் மலேரியா பணியாளா்கள் 118 போ், ஆயா 12 போ், பெண் உதவியாளா் 13 போ் என மொத்தம் 143 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் சாலைப் பணியாளா்கள் 620 போ், மலேரியா பணியாளா்கள் 309 போ், ஆயா 17 போ், காவலா்கள் 4 போ் பூங்கா பணியாளா்கள் 50 போ் அரங்க உதவியாளா் 2 போ், தூய்மைப் பணியாளா் 38 போ், துலங்குநா் 22 போ், பெண் உதவியாளா்கள் 23 போ், தொழிலாளிகள் 71போ் என மொத்தம் 1,156 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 720 போ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.