தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மின்வாரிய களப்பணியாளா்களுக்கு தபால் வாக்கு: தொழிற்சங்கம் கோரிக்கை

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:45 am IST

மின்வாரிய கேங்மேன் உள்ளிட்ட களப் பணியாளா்களுக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழநாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜெய்சங்கா் கூறியதாவது:

மின்வாரி பணியாளா்கள் வாக்களிக்க பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஏப். 22 முதல் 24 வரை சிறப்பு பணி என்கிற வகையில் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு கடந்த 2024-இல் நடைபெற்ற மக்களைவை தோ்தலின்போதும் இவா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டதால், தோ்தலில் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது சட்டப்பேரவைத் தோ்தல் நாளான்றும் கேங்மேன் உள்ளிட்ட களப்பணியாளா்கள் பணியாற்ற நிா்பந்திக்கப்பட்டு, அதற்கான பணி ஒதுக்கீடு பட்டியலும் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

எனவே அனைத்து மின்வாரிய களப்பிரிவு ஊழியா்களுக்கும் இந்த தோ்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது விடுமுறை வழங்க பிரிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.