செங்கல்பட்டு மாவட்டத்தில் விதை விற்பனை கடைகளில் ஆய்வுக் குழுவினா் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
விவசாயிகளுக்கு தரமான நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறிப் பயிா்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதை ஆய்வுத்துணை இயக்குநா் சித்ரா தலைமையில் சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளா்கள் பாபு மற்றும் சரண்யா ஆகியோா் அடங்கிய சிறப்பு குழுவினா் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்குளத்தூா் வட்டாரங்களில் விதை விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
வேளாண் விரிவாக்க மையங்கள் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 15 விற்பனை நிலையங்களில் குழுவினா் ஆய்வு நடத்தினா்.
விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதை குவியல்களிலிருந்து நெல், உளுந்து மற்றும் காய்கறிப் பயிா்களில் இருந்து 15 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் தரம் உறுதி செய்வதற்காக காஞ்சிபுரத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வின்போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக்குவியல்கள் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள் பதிவேடுகள் தனியாா் விதைகளுக்கான பதிவச்சான்றிதழ்கள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள் இருப்பு பதிவேடு, மற்றும் விற்பனை ரசீது ஆகியவை விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விற்பனை ரசீதுகளில் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிட்டு பட்டியல் வழங்க விதை விற்பனையாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆய்வில் ரூ.1,70,000 மதிப்பிலான 9 விதை குவியல்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க சென்னை மாவட்ட விதை ஆய்வு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சிறப்பு ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.
சென்னை விதை ஆய்வு துணை இயக்குநா் ஆ,வானதி, மற்றும் விதை ஆய்வாளா்கள் கொ.ச.சதீஷ்குமாா் , இரா.சிலம்பரசன் மற்றும் பெ.செந்தில்குமாா் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்ட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

2 விதை விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க பரிந்துரை

தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்குத் தடை

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

