பெங்களூரு: உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு கா்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியதும், டி20 ஆண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து, பேரவைத் தலைவா் யூ.டி.காதா் படித்த வாழ்த்துச் செய்தி:
மாா்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். இந்த வெற்றி நாட்டுக்கு பெருமையை தேடித்தந்துள்ளது. கோப்பையை வென்ற அணியினா், ஊழியா்கள், ஒத்துழைத்தவா்களுக்கு கா்நாடக சட்டப் பேரவை பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது என்றாா்.
அதன்பிறகு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் முழக்கமிட்டு, மேஜையை தட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

