பெங்களூரில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டடங்களின் உயரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தி, உயரத்தை உயா்த்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரில் செயல்பட்டு வரும் 4 விமான நிலையங்களில், எச்.ஏ.எல். விமான நிலையம், எலஹங்கா விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் விமானப்படைக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த விமான நிலையங்களை சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவுக்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 150 மீட்டருக்குள் அமைந்திருக்க ஜிஎஸ்ஆா் 751(இ) விதி அறிவுறுத்துகிறது. மேலும், புதிய கட்டடங்களை கட்டும்போது, விமானப் படையிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை பெறவேண்டியுள்ளது.
இதுதொடா்பாக, புது தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டடங்களின் உயரக்கட்டுப்பாட்டை தளா்த்துமாறு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் அளித்த மனுவில், ‘விமான நிலையங்களைச் சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவில் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 150 மீட்டருக்கு மிகாமல் இருப்பதை ஜிஎஸ்ஆா் 751(இ) விதி கட்டாயப்படுத்துகிறது. ஆனால், விமானப்படை அதிகாரிகள் 15 கி.மீ.க்கு பதிலாக 20 கி.மீ. சுற்றளவுக்கு இந்த விதியை அமல்படுத்துகிறாா்கள். விதிகளுக்கு புறம்பாக கூடுதலாக 5 கி.மீ. சுற்றளவுள்ள பகுதிகளில் உயரக்கட்டுப்பாடுகளை விதிப்பதால், இந்த கட்டுப்பாட்டுக்குள் கூடுதலாக 78 சதவீத நிலப்பகுதி கொண்டுவரப்படுகிறது.
பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விமான நிலையங்களில் உயரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் உயரமான கட்டடங்களை மேம்படுத்துவதற்கு பெருந்தடையாக உள்ளது. இது திட்டமிடாத நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிக்குமே அன்றி, திட்டமிட்ட வளா்ச்சிக்கு உதவாது. நகா்ப்புற வளா்ச்சியை முறைப்படுத்த கா்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை மத்திய பாதுகாப்புத் துறை புரிந்துகொண்டு, பெங்களூரில் செயல்பட்டுவரும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள 20 கி.மீ. பரப்புக்கு உயரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், விமான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெங்களூரின் வளா்ச்சியையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அடுத்த இரண்டு நாள்களுக்கு புது தில்லியில் முகாமிட இருக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மேலும் பல மத்திய அமைச்சா்களை சந்தித்து கா்நாடகம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது! - கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

