40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.

News image

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதி - AP

Updated On :25 மே 2026, 5:13 pm IST

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது,

இதுபற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயி பாகேய் பேசுகையில், “பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதே சரியாக இருக்கும். ஆனால், இதனாலேயே ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்று யாரும் கூற முடியாது” என்றார்.

மேலும், ”லெபனான் உள்பட பிராந்தியம் முழுவதிலும் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 14 அம்ச வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி அதில் எதுவும் சேர்க்கப்படவில்லை. இருதரப்பிலும் வரைவறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அணுசக்தி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.

கடற்படை முற்றுகை நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தவேண்டும், அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஈரான் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

ஹோர்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளுக்காக சேவைக் கட்டணங்கள் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கவரி தனியே வசூலிக்கப்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முரண்பாடாக நடந்துகொள்வதாகவும் நிலைப்பாடுகளை மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்காக 14 அம்சவரைவினை இறுதி செய்து வருவதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுரும் ஒப்பந்தம் விரைவில் கைகூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களை அவசரப்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

Summary

Iran warned agreement was not imminent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.