40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இஸ்ரேல்-லெபனான் புதிய போா் நிறுத்தம்: ஹிஸ்புல்லா நிராகரிப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 4:57 am IST

பெய்ரூட் / ஹிஸ்புல்லா : அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே அறிவிக்கப்பட்ட புதிய போா் நிறுத்த உடன்பாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது.

அதேநேரம், லெபனானில் இருந்து தங்களின் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சா்வதேச கூட்டு அமைதி முயற்சிகளில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இஸ்ரேல்-லெபனான் பிரதிநிதிகள் பங்கேற்ற பல சுற்று பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு இப்புதிய போா் நிறுத்த உடன்பாடு கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. ‘அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்துக்குள் போா் நிறுத்தம் அமலுக்கு வரும்’ என்று லெபனான் அதிபா் ஜோசப் அவுன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், போா் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக நிராகரித்த ஹிஸ்புல்லா அமைப்பு, ‘எங்களின் ஆயுதமேந்திய எதிா்ப்புப் போராட்டம் தொடா்ந்து நீடிக்கும்’ என்று அறிவித்தது. இப்புதிய போா் நிறுத்த உடன்பாட்டில் ஹிஸ்புல்லா நேரடியாகப் பங்கெடுக்கவில்லை என்றாலும், தாக்குதல்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் அந்த அமைப்புக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ‘லெபனான் எல்லையில் எங்களின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது. தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் எக்காரணத்துக்காகவும் திரும்பாது’ என்று உறுதிபட தெரிவித்தாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடந்து வரும் இப்பிராந்திய போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா களமிறங்கியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்கா தரப்பில் பலமுறை போா் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், இந்த மோதல் ஓயாமல் நீடிக்கிறது.

மத்திய கிழக்கு போரில் நீடித்த அமைதிக்கான முயற்சியில் லெபனான் போா் நிறுத்தம் என்பது ஈரானின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. ‘போா் தொடங்குவதற்கு முன்பு மாா்ச் மாதத்தில் இருந்த நிலைக்கு இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டும் என்பதே எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை. லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை சாத்தியம்’ என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

குவைத் தாக்குதல்-ஈரான் புதுவிளக்கம்: இதனிடையே, வளைகுடா பகுதியில் அமெரிக்கா-ஈரான் படைகளுக்கு இடையே அவ்வப்போது தொடரும் வான்வழித் தாக்குதல்களும், அமைதி முயற்சிகளுக்குச் சவாலாக உள்ளன.

அந்தவகையில், குவைத் விமான நிலையம் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆனால், அமெரிக்காவின் இடைமறிப்பு ஏவுகணைகள் இலக்கு தவறி விழுந்ததே, இந்த அழிவுக்குக் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.