அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத்தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.
1937-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட, தற்போதைய தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சோதனை முறையில் மதுவிலக்கு முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது.
'டார்க் வெப்' உள்ளிட்ட சில சட்ட விரோத இணையவழி வர்த்தகம் மூலம் போதைப் பொருள்கள் விற்பனை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ரூ.50,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த ஓர் அரசும் இதுநாள் வரை முன்வரவில்லை.
புதிதாக பதவியேற்க இருக்கும் மாநில அரசு தமிழ்நாட்டில் பரவலாக ஊடுருவியிருக்கும் போதை கலாசாரத்துக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வார்கள் என நம்புவோம்.